Spicy Food: ரொம்ப காரமா சாப்பிடும்போது நமது மூக்கில் தண்ணீர் வருவது ஏன் தெரியுமா..?
Spicy Food: ரொம்ப காரமா சாப்பிடும்போது நமது மூக்கில் தண்ணீர் வருவது ஏன் தெரியுமா..?
காரமான உணவுகள் நமது மூக்கில் தண்ணீர் வருவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

Spicy Food is Good or Bad:
வறுத்த பதார்த்தங்கள், சூடான கறி போன்றவற்றில் மிளகாய் சாஸ் மற்றும் மிளகு அதிகமாக சேர்க்கப்படுகின்றன.
இதனால் இவை ஸ்பைசி அதாவது கார உணவுகள் என அழைக்கப்படுகின்றன.
இந்த கார உணவுகள் உடலில் வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
சோர்வுற்ற கண்கள், வியர்த்தல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை கார உணவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்களாக உள்ளது.
மிளகாய் குடும்பத்தில் உள்ள அனைத்து மிளகாய்கள் மற்றும் மிளகு தூள்கள் ஆகியவை காரத்தை அதிகமாக்கும் பொருட்களாக உள்ளன.
எனவே இவை தோலிலோ அல்லது சளி சவ்வுகளிலோ தாக்கும்போது அது ஒரு வகையான எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.
நீங்கள் காரமான உணவை சாப்பிடும்போது அது உங்கள் நாக்கில் பிணைக்கப்பட்டுள்ள வெப்பம் மற்றும் வலி ஏற்பிகள் வழியாக மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.
இது வெப்ப நிலையில் உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாக மூளையை ஏமாற்றுகிறது.
எனவே இதனால் உடல் தன்னை குளிர்விக்க நினைக்கிறது. இதனால் வேகமாக சுவாசிப்பது மற்றும் வியர்த்தல் மூலமாக உடல் குளிர துவங்குகிறது.
உடல் அதிக காரத்தை பெறும்போது அதிலிருந்து விடுப்பட முயற்சிக்கிறது.
இதனால் அதிகமான உமிழ்நீர், கண்ணீர் மற்றும் சளியை உடல் உற்பத்தி செய்கிறது.
இதனால் மூக்கு ஒழுகுதல் கண்ணீர் வருதல் போன்ற விஷயங்கள் ஏற்படுகின்றன.
Spicy Food:
நீங்கள் உண்ணும் உணவானது எவ்வளவு காரமானது என்பதை பொறுத்து உங்கள் மார்பில் எரியும் உணர்வும், வயிற்று பிடிப்புகளில் வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
நீங்கள் உங்கள் செரிமான மண்டலத்தை சேதப்படுத்திவிட்டீர்கள் என்று பொருள் இல்லை.
உங்கள் நாக்கு எரிவதாக உணரும்போது உண்மையில் உங்கள் நாக்கு எரிவதில்லை.
சூடான அல்லது காரமான உணவை உண்ணும் போது நாக்கில் உள்ள வலி ஏற்பிகள் செயல்பட்டு உங்களுக்கு இந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
அதிகமான காரத்தை எடுத்துக் கொள்ளும் போது மூக்கை துணியை கொண்டு துடைக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் நாக்கின் உணர்வை சரி செய்ய குளிர்ந்த நீர் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அதே போல பால் பொருட்களும் காரத்திற்கு ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.
பால் பொருட்களின் புரதத்தை எதிர்க்கொள்ளும்போது மிளகாயில் உள்ள கேப்சைசின் கரைகிறது.
அதனால் காரம் காரணமாக நாக்கில் எரிச்சல் ஏற்படும் பொழுது ஒரு கிளாஸ் பால், அல்லது புளிப்பு க்ரீம் அல்லது குளிர்ந்த நீர் ஆகியவற்றை அருந்துவது நாக்கிற்கு குளிர்ச்சியை அளிக்கும்.
Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!
மேலும் எரியும் நாக்கிற்கு அது ஒரு உடனடி நிவாரணியாக செயல்படுகிறது.
எனவே அடுத்த முறை எங்காவது ஒரு ஹோட்டலில் கார உணவுகளை உட் கொள்ள திட்டமிடும் முன்பு இந்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.