SBI எச்சரிக்கை..! WhatsApp வழியாக உலா வரும் மோசடி அழைப்புகள்..!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா WhatsApp வழியாக உலா வரும் மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் குறித்து ஒரு ட்வீட் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் குற்றவாளிகள் WhatsApp வழியாக வாடிக்கையாளர்களை சென்றடைவதாக SBI தெரிவித்துள்ளது.
இந்த மோசடிக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் முதலில் அந்த நபர் SBI வழங்கிய லாட்டரியை வென்றதாகக் கூறி, பின்னர் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை அழைக்குமாறு பயனரைக் கேட்கிறார்,
இது அவர்களை ஒரு மோசடி வலைக்குள் இட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான மோசடி நடக்கிறது என்பதை அறிந்த SBI, வங்கியால் எந்த விதமான சலுகைகள் அல்லது லாட்டரிகளும் வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.
உடன் இதுபோன்ற “பொறி”களில் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாறும் SBI தனது பயனர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், லாட்டரி மற்றும் பொருட்கள் தொடர்பாக மக்கள் பெறும் மின்னஞ்சல்கள் வழியாக ‘ஃபிஷிங்’ மோசடி நடப்பது குறித்து SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. வங்கியைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், அக்கவுண்ட் குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் எந்தவிதமான OTP களையும் ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்றும் SBI கூறியுள்ளது
எஸ்பிஐ வெளியிட்ட ட்வீட் பின்வருமாறு:
“வாடிக்கையாளர்கள் இப்போது WhatsApp வழியிலான மோசடிகளால் குறிவைக்கப்படுகின்றன. இணைய குற்றவாளிகள் உங்களை முட்டாளாக்க விடாதீர்கள்! தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.”
இத்தகைய மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள் பின்வருமாறு:
- ஒருவர் தங்கள் வங்கி விவரங்கள், பின் குறியீடுகள் அல்லது கடவுச்சொற்களை ஒருபோதும் பகிரக்கூடாது.
- அதே போல உங்கள் அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள் அல்லது ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் அல்லது படிவங்களின் புகைப்படங்களை பகிரக்கூடாது.
- அறியப்படாத எண்ணிலிருந்து அல்லது குறிப்பிட்ட எண் பற்றி உறுதியாகத் தெரியாவிட்டால், அதில் இருந்து வரும் இணைப்புகள் (லின்க்ஸ்), படங்கள், ஜிஃப்கள் அல்லது எந்த வகையான மீடியாவையும் கிளிக் செய்வதை நீங்கள் எப்போதும் தவிர்க்க வேண்டும்
Also Read: இனி WhatsApp-இல் டியோக்களை ம்யூட் செய்தும் அனுப்பலாம்..!
- யாராவது உங்களிடம் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால் அல்லது லாட்டரி குறித்து உங்களுக்குத் தெரிவித்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து ஒவ்வொரு விடயத்தையும், ஒவ்வொரு தகவலையும் மீண்டும் உறுதிப்படுத்தவும்,
- ஏனெனில் வங்கியில் உள்ள ஊழியர்கள் உங்களிடம் ஒருபோதும் OTP களையும் அல்லது இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்க மாட்டார்கள்.
- ஒரு பொது வைஃபை பயன்படுத்தி உங்கள் நெட்பேங்கிங் அக்கவுண்ட்டிற்க்குள் ஒருபோதும் லாக் இன் செய்ய வேண்டாம்,
- ஏனெனில் அந்த நெட்வொர்க்கின் கீழ் ஒரு ஹேக்கர் பதுங்கி இருக்கலாம், இதனால் நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கருடன் பகிரப்படலாம்.