இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Ragi Flour: கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

Ragi Flour: இந்நாட்களில் எடை இழப்புக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

Ragi Flour

உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.

குறிப்பாக இந்நாட்களில் கேழ்வரகு அதாவது ராகி அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

கேழ்வரகில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

கேழ்வரகின் முக்கிய அம்சம் என்னவென்றால், கொழுப்பு (Fat) மற்றும் சோடியம் சிறிதளவும் இல்லை.

இது தவிர, இதில், நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன.

இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, எடை இழப்புக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், கேழ்வரகில் இன்னும் பல நன்மைகள்(Health Tips) உள்ளன.

Ragi Flour:

கேழ்வரகில் கோதுமை மாவு அல்லது அரிசி மாவை விட பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது.

எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகியை காலை உணவிலோ அல்லது பகலில் மதிய உணவிலோ சேர்ப்பது நன்மை பயக்கும்.

கேழ்வரகில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. ஆகையால், யாருக்காவது, இரத்த சோகை இருந்தாலோ அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தாலோ, அவர்களுக்கு கேழ்வரகு நல்ல பயன் அளிக்கும்.

கேழ்வரகில் அமினோ அமிலம் மற்றும் உடலுக்குத் தேவையான புரதங்கள் நிறைந்துள்ளன.

சைவ உணவை மட்டும் உட்கொள்ளும் மக்களின் உணவில் பெரும்பாலும் புரத மூலங்கள் குறைவாக இருக்கின்றன.

புரதத்தின் குறைபாட்டை பூர்த்தி செய்ய அவர்கள் ராகியை உட்கொள்ளலாம்.

ராகியில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

கவலை, மனச்சோர்வு அல்லது தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ராகியை உட்கொண்டால் நல்ல மாற்றத்தை உணரலாம். ராகியால் அந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கேழ்வரகானது எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது பச்சிளங் குழந்தைக்கு கூட உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்கலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை நோய் குணமாகவும் கேழ்வரகு உதவுகிறது.

பாதிப்புகள்

குறிப்பாக சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், அத்தகைய நபர்கள் ராகியை உட்கொள்ளக்கூடாது,. ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் அதை தவிர்ப்பது நல்லது.

தைராய்டு நோயாளிகளும் ராகியை உட்கொள்ளக்கூடாது. ராகியால் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

அதிக அளவில் ராகியை உட்கொண்டாலும் பிரச்சனை ஏற்படலாம். அதிகமாக ராகி உட்கொள்வதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் வாயு, உப்பசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.