Best Apps for Visually Impaired: கண்பார்வையற்றவர்களுக்காக புதிய சாதனம்..! அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனம்..!
Best Apps for Visually Impaired: கண்பார்வையற்றவர்களுக்காக புதிய சாதனம்..! அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனம்..!
எப்போதும் புதிய கண்டுபிடிப்பினை உலகறிய செய்வதில் கூகுள் முதல் இடம்தான்.
சமீபத்தில் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் கூகிள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய முறைமைகளை அறிமுகம் செய்வதில் கூகுள் முன்னணியில் திகழ்கின்றது.

Best Apps for Visually Impaired:
இன்றைய சூழ்நிலையில் ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) என்ற தொழில்நுட்பத்தை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதில் பல புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் போட்டியிட்டு வருகிறது.
இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) தொழில்நுட்பத்தில் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
பொதுவாக கண்பார்வையற்றவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.
இதன் காரணமாக மாற்றுதிறனளிகளுக்கு இப்புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்டு அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஓடிச் செல்லக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கண்பார்வையற்றவர்கள் அற்றவர்களுக்கான சிறந்த வரப்பிரசாதமாக அமையும் என எதிர்க்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஹக்தோன் நிகழ்வு ஒன்றில் இலாபநோக்கமற்ற நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியான தோமஸ் பனிக் என்பவர் கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் முகமாக தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்யுமாறு கூகுள் பொறியிலாளர்களிடம் கேட்டிருந்தார்.
இதற்கிணங்க இந்த சாதனமானது உருவாக்கப்பட்டுள்ளது என்று என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியாக இருந்தாலும் நாம் நிச்சயமாகக் கூகிள் இடமிருந்து ஒரு அதிநவீன புதிய தலைமுறை சாதனத்தை எதிர்பார்க்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.