Immunity Power: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஜாதிக்காயின் பங்கு..!
Immunity Power: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஜாதிக்காயின் பங்கு..!
கொரோனா நெருக்கடியில் நாம் வீட்டிலேயே தங்கியிருந்து, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

Immunity Power:
ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தபடியே தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க நன்மைகளைத் தரும் மசாலா தேநீர், கஷாயங்கள் என அனைத்தையும் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு அற்புதமான மூலிகை தான் ஜாதிக்காய்.
நட்மெக் (nutmeg) என்று பொதுவாக அழைக்கப்படும் ஜாதிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழமையான தீர்வாகும். இது ஒரு சூடான மசாலா பொருள் ஆகும்.
முக்கியமாக இனிப்பு பண்டங்களில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது.
ஜாதிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிக நேரத்திற்கு உங்கள் வயிற்றை முழுமையானதாக உணர வைக்கிறது.
இதனால் கூடுதல் எடை உள்ளவர்கள் தங்களது எடையை குறைக்க தேநீரில் சிறிது ஜாதிக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம்.
எவ்வாறு உட்கொள்வது?
ஒரு கப் சூடான பாலில் அரை டீஸ்பூன் தேன், பொடித்த ஏலக்காய் சிறிதளவு மற்றும் 2 சிட்டிகை ஜாதிக்காய் தூள் ஆகியவற்றை கலந்து குடிக்க வேண்டும்.
இந்த கலவையானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.
நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஜாதிக்காய் தூளை ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து பருகி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க ஜாதிக்காய் மிகவும் சிறந்தது. ஜாதிக்காயில் மூட்டு வலிக்கு அதிசயங்களைச் செய்யும் மைரிஸ்டிசின், எலிமிசின், யூஜெனோல் மற்றும் சஃப்ரோல் போன்ற பல அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன.
இது செரிமான நொதிகளின் சுரப்பை மேம்படுத்துகிறது மற்றும் அதில் உள்ள நார் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றில் இருந்து வாயுவை அகற்றவும் உதவுகிறது.
ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும்.
எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது.
சிறு குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு ஏற்படும் அப்போது இந்த ஜாதிக்காய் தூளை மிகவும் குறைந்த அளவில் பசுப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று போக்கு குணமாகும்.
மேலும் தூங்காமல் அழுது கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஜாதிக்காய் தூளை சூடான பாலில் கலந்து கொடுக்க பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தூங்க வைக்க இதை தினந்தோறும் எல்லாம் தரக்கூடாது. அதோடு இதை அதிக அளவிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் தர கூடாது.
ஜாதிக்காய் என்பது பல் வலியை போக்க உதவும் என்று கூறப்படுகிறது. சூடான காபியில் ஜாதிக்காய் தூள், சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் குமட்டல், இரைப்பை அழற்சி மற்றும் அஜீரண கோளாறுகளை குறைக்க முடியும்.
சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும்.
Also Read: Liposomal vitamin c benefits: லிபோசோமால் வைட்டமின்கள் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்..?
குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.
எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அதிக அளவு ஜாதிக்காய் சாறு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து கணைய செயல்பாட்டை மேம்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.