News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Home Remedies For Fever:ஒரே நாளில் காய்ச்சலை குணமாக்கும் முளைக்கீரை..!

Home Remedies For Fever:ஒரே நாளில் காய்ச்சலை குணமாக்கும் முளைக்கீரை..!

கீரை என்றாலே நம் நினைவில் வருவது இந்த கீரை தான், நாம் அனைவரும் சாப்பிடும் கீரை வகைகளில் ஒன்று, அது தான் முளைக்கீரை.

முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலின் இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.

Home Remedies For Fever

காலநிலை மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த காய்ச்சலுக்கு முளைக் கீரையுடன் சீரகத்தையும் சேர்த்து நெய்யில் வறுத்து, கூடவே சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் விலகி போகும்.

உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் இந்த முளைக்கீரையில் உள்ளது.

Mulai Keerai Benefits:

முளைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கிறது.

தங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு முளைக்கீரை சமைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.

முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் வாயில் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

முளைக்கீரையை சாப்பிட்டால் காச நோயால் ஏற்படும் காய்ச்சல் போன்றவை சரியாகும்.

குடல்புண் சரியாவதற்கு முளைக்கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் போதும், நாளடைவில் குடல் புண் சரியாகிவிடும்.

முளைக்கீரையிலிருந்து அதன் சாற்றினை பிரித்து எடுத்து அதில் உளுந்தை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

அதனால், வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இக்கீரையை சாப்பிட கொடுப்பது நல்லது.

மூலம் பகுதியில் ஏற்படும் புடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள்,அதிலிருந்து விடுபட முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் எடுத்து, அதனுடன் சிறு பருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

பசியின்மை நோய் உள்ளவர்கள் முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாகும்.

உடலில் இருக்கிற பித்தத்தின் அளவு அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.

Also Read:Mudakathan Keerai Benefits: அனைத்து நோய்களையும் தீர்க்கும் கீரை..!

How To Get Clear Skin?

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் பொதுவான ஓர் விருப்பமாகும்.

எனவே, முகம் பொலிவு பெறுவதற்கு முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் அடிக்கடி தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து கூடவே முகத்தில் பொலிவு ஏற்படும்.

தோல் வியாதிகள் ஏற்பட்டால் பலருக்கும் அது மிகுந்த வருத்தத்தை தருகின்றது. சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் உள்ளவர்கள் முளைக்கீரையை உண்பதினால் குணமடையலாம்.

மேலும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்கி, ஈரப்பதத்தையும், பளபளப்பான தன்மையையும் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *