Tamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Curd: தயிர் எடுத்து கொள்வது நன்மையா..! தீமையா ..!

Benefits Of Curd: தயிர் எடுத்து கொள்வது நன்மையா..! தீமையா ..!

இங்குப் பலருக்கும் தவிர்க்க முடியாத உணவாகத் தயிர் இருக்கிறது. தயிர் பெரும்பாலானோருக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் சிலருக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

Benefits Of Curd

Food Habits In India:

இந்தியாவில் நம் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாநிலத்திலும் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

தமிழ்நாட்டில் இருக்கும் உணவு முறைக்கும் கேரளாவில் இருக்கும் உணவுப் முறைக்குமே பெரிய வித்தியாசம் உள்ளது.

ஆனால், நாடு முழுவதும் இருக்கும் ஒரு சில உணவுகளில் ஒன்று தயிர். சிலருக்கு மதிய உணவை தயிருடன் முடித்தால் தான் சாப்பிட்டது போன்ற உணர்வே ஏற்படும்.

தயிர் சாப்பிடுவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அதை பற்றி நாம் காண்போம்.

Benefits Of Curd:

தயிர் என்பது நமது நாட்டில் பெரும்பான்மையான அன்றாட உணவாகும். உணவின் சுவையை உயர்த்தும் இயற்கையான, ருசியான உணவாகவே தயிர் காணப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் நம்மை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும் . தயிரில் புரோபயாடிக்குகள்(probiotics) நிறைந்துள்ளது.

அதாவது இதில் காணப்படும் ஆபத்தை விளைவிக்காத பாக்டீரியாக்கள்(bacteria) மற்றும் ஈஸ்ட்கள்(yeasts) செரிமானத்தை வலுவாக வைத்திருக்கவும், குடல் ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

தயிர் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக உருவாக்குகிறது.

மேலும், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துகிறது.

மேலும், முன்கூட்டியே ஏற்படும் முதுமை நிலையை தடுக்கிறது. இது மட்டுமல்லாமல் தலையில் பொடுகு ஏற்படுவதையும் குறைக்கிறது.

இந்த அற்புதமான நன்மைகளைத் தவிர, தயிர் சிலருக்குச் சின்ன சின்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

Is Yogurt Healthy:

ஏப்பம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்குத் தயிர் உதவியாக இருந்தாலும் புரோபயாடிக்கில் இருக்கும் சில பாக்டீரியாக்கள் வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

தொடர்ந்து தயிர் சாப்பிடுவதை நிறுத்துங்கள், ஏனெனில் தொடர்ந்து தயிரை எடுத்துக் கொள்வோருக்கு மலச்சிக்கல் மற்றும் அதிக தாகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற சிக்கல் தொடர்ந்து ஏற்பட்டால் தயிர் சாப்பிடுவதைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாம் அல்லது மருத்துவரை அணுகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தயிரைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
அலர்ஜி புரோட்டீன் கொண்ட உணவுகளில், சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் புளிக்கப்படும் போது உருவாகும் பயோஜெனிக் அமின்களால்(biogenic amines) இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பயோஜெனிக் அமீன் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமீன் குழுக்களைக் கொண்ட ஒரு உயிரியக்கப் பொருளாகும்.

இந்த அமீன்கள் நரம்பு மண்டலத்தை மோசமாக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தைப் பெருமளவில் குறைக்கின்றன அல்லது அதிகரிக்கின்றன. இதன் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது.

யார் சாப்பிடக் கூடாது:

பெரும்பாலான மக்களுக்கு தயிர் சாப்பிடும்போது எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என்றாலும், சிலருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், தயிரின் புரோபயாடிக்குகளில் உள்ள பாக்டீரியா அல்லது ஈஸ்ட்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து பலவீனமான நபர்களுக்குத் தொற்றை ஏற்படுத்தும்.

Also Read: Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் இருப்போர், அறுவை சிகிச்சை செய்து கொஞ்ச நாட்களே ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும்.

அதேபோல கடுமையான கணைய அலர்ஜி உள்ளவர்கள் தயிர் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.